#ராமநாதபுரம் || 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் பிரசாத் என்ற டேவிட்(22) சம்பவத்தன்று செல்போனில் கேம் விளையாட தருவதாக கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்பு சிறுமிக்கு டேவிட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டேவிட்சை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for sexually harassing a 5 years old girl in ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->