12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... வாலிபர் கைது...!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வன சங்கரி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(29). இவர் தந்தையின் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஜெகதீஷ் 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜெகதீஷை கைது செய்து, மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for sexually harassing 12 year old girl in ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->