விருதுநகர் : மகளை பலாத்காரம் செய்ததாக பெற்ற தாயிடம் கூறிய வாலிபர் போக்ஸோவில் கைது.!! - Seithipunal
Seithipunal


மகளை பலாத்காரம் செய்ததாக பெற்ற தாயிடம் கூறிய வாலிபர் போக்ஸோவில் கைது.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கூடம் சென்று வரும்போது ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர், மாணவியிடம் தன்னைக் காதலிக்கும்படி மிரட்டியும், கேலியும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மாரிமுத்து வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை வீடு புகுந்து கடத்தி செண்பக தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதில், பயந்துபோன அந்த சிறுமி இதை வெளியில் சொல்லாமலேயே இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே திடீரென சிறுமியின் வீட்டுக்கு வந்த மாரிமுத்து, சிறுமியின் தாயிடம் உங்கள் மகளைப் பலாத்காரம் செய்துவிட்டேன். அதனால் எனக்கே திருமணம் செய்து வையுங்கள் என்றுக் கேட்டுள்ளார். இதற்கு சிறுமியின் தாய் மறுப்பு தெரிவிக்கவே அந்த வாலிபர் அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனே அந்த சிறுமியின் குடும்பத்தினர் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for sexuall harassment in viruthunagar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->