#கடலூர்: பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை - போக்சோவில் வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் எஸ். எரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் சீனு (23). ஐடிஐ முடித்த இவர், பண்ருட்டியில் உள்ள பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு மாணவியை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் மாணவி காதலை ஏற்க மருத்துள்ளார். இருப்பினும் சுந்தர் சீனு மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இந்த விசாரணையில் சுந்தர் சீனு பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர் சீனுவை கைது செய்தனர். பின்பு போலீசார் சுந்தர் சீனுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for love torture school girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->