ஒருதலை காதல்... கல்லூரி மாணவியை காரில் கடத்திய வாலிபர்... திருவாரூரில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை வாலிபர் காரில் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வருவதற்காக முத்துப்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது காரில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து போலீசார் மாணவியை தேடி விரைந்தனர். அப்பொழுது, இளைஞர் மாணவியை பாதியிலேயே இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் மாணவியை கடத்திச்சென்றது தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் ஒரு தலைக்காதல் விவகாரத்தின் மாணவியை கடத்தியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for kidnaping college girl in thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->