இருசக்கர வாகனத்தில் சாகசம் - வாலிபரை கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் சாகசம் செய்து, அதனை தனது முகநூல் பக்கத்தில் ரீல்ஸாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில், "இருசக்கர வாகனத்தை ஓட்டியது கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பது தெரியவந்தது. 

உடனே அவரை கைது செய்த போலீசார் அவர் ஓட்டிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் போலீசார், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது மற்றும் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிகை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for bike stunt in karoor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->