சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வாலிபரை கைது செய்த போலீஸ்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து விசாரித்தனர்.

இதில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜீவரத்தினம் என்ற வாலிபர் சிறுமியை கட்டாயப்படுத்தி பராத்காரம் செய்ததும், அதனை அவரது நண்பர்கள் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜீவரத்தினத்தை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலை மறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for 5 month pregnant a girl in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->