சொத்து பிரச்சனையில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்.! செங்கல்பட்டு அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் சொத்து பிரச்சனையில் தம்பியை, அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த முகையூர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பத்மநாபன் (52). இவரது அண்ணன் ராமச்சந்திரன். இவர்கள் இருவரிடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து நேற்றும் இவர்களிடையே சொத்து பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்மநாபனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பத்மநாபன் மயங்கி விழுந்த நிலையில், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Younger Brother killed elder brother in property dispute in Chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->