விருதுநகரில் சோகம் - வெளியில் சென்ற கல்லூரி மாணவர்.!! பிணமாக மீட்பு.!! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் சோகம் - வெளியில் சென்ற கல்லூரி மாணவர்.!! பிணமாக மீட்பு.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆர்.ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோதி முருகன். பெயிண்டரான இவருடைய முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் வசித்து வருகிறார்.

இவருடைய முதல் மனைவியின் மகன் விஜயகுமார். இவர் ஆலங்குளத்தில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் வசித்து கொண்டு செவல்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில், விஜயகுமார் கடந்த 10 ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். மறுநாள் காலை கே.லட்சுமியாபுரம் பேருந்து நிலையம் அருகில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man body rescue in viruthunagar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->