பதினாறு வயது சிறுமியுடன் காதல் திருமணம் - கையும் களவுமாக பிடிபட்ட வாலிபர்.! - Seithipunal
Seithipunal


பதினாறு வயது சிறுமியுடன் காதல் திருமணம் - கையும் களவுமாக பிடிபட்ட வாலிபர்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் சென்னை திருவொற்றியூரில் உள்ள மளிகை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மதன்ராசுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டது. 

இவர்களின் காதலுக்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், மதன்ராஜ் சிறுமியைக் கடந்த 14-ந் தேதி அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் மதன்ராஜின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 

இதற்கிடையே சிறுமியின் தந்தை தான் மகளைக் காணவில்லை என்று திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்  புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, நாகர்கோவிலுக்கு சென்று சிறுமியை மீட்டனர். 

அதன் பின்னர், சிறுமியை காதலித்து திருமணம் செய்த மதன்ராஜ் மீது குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man arrested for mariiage to girl in thiruvotriyur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->