உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்..பொதுமக்களுக்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள்வழங்கிய மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள்  வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளால், ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள் 2025ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் கிரீன் சர்க்ள், அணைக்கட்டு, ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது, 5,000 மரக்கன்றுகள்பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கும் விதத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், "பூமியின் வளம் அனைவரின் தேவைக்கும், என்ற உயரிய கருத்து பொது மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது."

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் இயக்குநரும் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தாளாளருமான டாக்டர் எம்.சுரேஷ்பாபு , தலைமை வகித்தார். அணைக்கட்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பிநந்தகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கி விழாவினை உற்சாகத்துடன் துவங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, வேலூர் கிரீன் சர்க்ள் பகுதியில், வேலூர் துணை காவல்துறை கண்காணிப்பாளரான பிரித்விராஜ் சவுகான், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவரும், செய்தி ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலருமான டாக்டர்.ராஜ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழாவினை துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாக அலுவலர், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் மாணவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Environment Day celebration Students distributed 5000 tree saplings to the public


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->