காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி, விவசாயி படுகாயம்.! அச்சத்தில் கிராம மக்கள்.!
Worker killed in elephant attack in kovai
கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள திருமாலூரை சேர்ந்தவர் விவசாயி சவுந்தர்ராஜன்(58). இவர் நேற்று காலை சங்கிரி கருப்பட்டராயன் கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக காட்டு யானை ஒன்று குட்டியுடன் குறுக்கே வந்துள்ளது.
இதைப் பார்த்து அச்சமடைந்த சவுந்தர்ராஜன், யானைகளிடமிருந்து தப்பிக்க மொபட்டை வந்த வழியாக திருப்பியுள்ளார். ஆனால் காட்டு யானை சவுந்தர்ராஜனை துதிக்கையால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சவுந்தர்ராஜன் அங்கிருந்து கத்திக்கொண்டே தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சௌந்தரராஜன் வீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தொழிலாளி மயில்சாமி(65) என்பவர் ஆட்டுக்கு இலை பறிப்பதற்காக பள்ளத்தாக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காட்டு யானை மயில் சாமியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மயில்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Worker killed in elephant attack in kovai