திருநங்கையை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி...கடைசியில் நடந்த அதிர்ச்சி!
Worker invites transgender to go on a picnic The shock at last
திருநங்கையை உல்லாசத்துக்கு அழைத்து தகராறு செய்த கூலி தொழிலாளியை போட்டு தள்ளிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது இதை பார்த்த ரோந்து சென்ற ஊர்க்காவல் படைவீரர் சீனிவாசன் உயிருக்கு போராடியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.முன்னதாக முகத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரிடம் ஊர்க்காவல் படைவீரர் சீனிவாசன் விசாரித்தபோது
தனது பெயர் வெங்கடேசன்என்றும் திருநங்கை ஒருவரும் அவருடன் வந்த வாலிபர் ஒருவரும் சேர்ந்து தன்னை கட்டையால் அடித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர் என்றும் கூறினார். இந்தநிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்கடேசன் பரிதாபமாக இறந்துபோனார். அவருடைய உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸ் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்தனர் .அப்போது வெங்கடேசனை தாக்கிவிட்டு தப்பியதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த 17 வயது திருநங்கை மற்றும் அவரது நண்பர் ராயப்பேட்டையை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
திருநங்கையிடம் வெங்கடேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், உல்லாசத்துக்கும் அழைத்தும் தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் வெங்கடேசனை கட்டையால் தாக்கிவிட்டு திருநங்கையும் அவரது நண்பர் ராகேஷ் குமாரும் தப்பிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Worker invites transgender to go on a picnic The shock at last