மனைவி கண்டிப்பு.. தீக்குளித்த போதை தொழிலாளி..!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ரவி(55). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இந்நிலையில் ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வந்து பாக்கியலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று காலையிலேயே ரவி மது குடித்துவிட்டு வந்து பாக்கியலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரவியை பாக்கியலட்சுமி கண்டித்துள்ளார். 

இந்நிலையில் ரவி தற்கொலை செய்து கொள்வதற்காக சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து ரவியில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாக்கியலட்சுமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ரவியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரவி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker committed suicide by setting himself on fire in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->