போலீசாரின் செயலால் எனக்கு தலைகுனிவு! ஆத்திரமடைந்த தொழிலாளி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி! - Seithipunal
Seithipunal


தமிழக கேரள எல்லை குமுளி வெப்பகண்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி சுரேஷ் (வயது 42) இவர் ஏலத் தோட்ட தொழிலாளி. இவர் அடிக்கடி கஞ்சா விற்பனை செய்து பலமுறை கைதாகி விடுதலை செய்யப்பட்டார். 

இந்நிலையில் குமுளி போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக முனியாண்டி வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். ஆனால் அவரது வீட்டில் கஞ்சா எதுவும் கிடைக்கவில்லை. 

இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் முனியாண்டி எதற்காக தனது வீட்டில் போலீசார் சோதனை நடத்துகிறார்கள். 

எனக்கு அக்கம் பக்கத்தில் தலைகுனிவாக உள்ளது என தெரிவித்து குமுளி காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும் காவல் நிலைய வளாகத்திலேயே முனியாண்டி மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். 

இதனை பார்த்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முனியாண்டி சுரேஷ் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

worker attempted suicide at the police station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->