இன்ஸ்டாகிராமில் பழக்கம்... சிறுமிக்கு நடந்த கொடுமை..! போக்சோவில் தொழிலாளி கைது..! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் கூலித்தொழிலாளியான ரஞ்சித் குமாருக்கும்(22), ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், சிறுமியை ரஞ்சித் குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker arrested for Raped a girl in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->