கிருஷ்ணகிரி || 6 மாத குழந்தையை கடத்திய பெண் கைது.!
Women arrest for kidnap a 6 month child in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு மாத குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊருக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தனர். பின்பு பேருந்து நிலையத்திலேயே அவர்கள் தூங்கி உள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கண் விழித்து பார்த்த போது தங்களது 6 மாத குழந்தை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பேருந்து நிலையம் முழுவதும் குழந்தையைத் தேடிப் பார்த்துள்ளனர். குழந்தை கிடைக்காததால் இது குறித்து அவர்கள் ஓசூர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரையடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண் குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை தூக்கிச் சென்ற பெங்களூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். மேலும் ராஜேஸ்வரியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Women arrest for kidnap a 6 month child in kirishnagiri