ஷானன் நகரில் தவித்த 220 ஏர் இந்தியா பயணிகள் டெல்லி வருகை...! - தலா ரூ.20,000 கருணைத் தொகை அறிவிப்பு
220 Air India Passengers Stranded Shannon Arrive Delhi Ex gratia Payment 20000 Each Announced
அயர்லாந்தின் ஷானன் நகரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவித்த ஏர் இந்தியா பயணிகள், வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர்.

கடந்த திங்கட்கிழமை நியூயார்க்கிலிருந்து டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த 'ஏ350' ரக விமானத்தில் (AI102) திடீர் கோளாறு ஏற்பட்டதால், அது அயர்லாந்துக்குத் திருப்பி விடப்பட்டது.
இதனால் 220-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் அங்குத் தங்கும் சூழல் உருவானது.
மேலும், பயணிகளை மீட்க சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரிலிருந்து 'போயிங் 787' ரக சிறப்பு விமானம் ஷானன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விமானம் புதன்கிழமை பிற்பகல் பயணிகளுடன் புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு, நல்லெண்ண அடிப்படையில் தலா ரூ.20,000 கருணைத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.
English Summary
220 Air India Passengers Stranded Shannon Arrive Delhi Ex gratia Payment 20000 Each Announced