கோத்தகிரி அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


கோத்தகிரி அருகே மின்னல் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி இன்பமலர் (44). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்பமலர் நேற்று மாலை கெரடாமட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், மின்னல் தாக்கி இன்பமலர் கீழே விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த சக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இன்பமலரை மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இன்ப மலர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இன்ப மலரின் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman worker killed by lightning in Kotagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->