திருமணம் முடிந்த இரண்டாவது நாளே வெளியே சென்ற கணவன்.! தர்ணாவில் ஈடுபட்ட பெண் காவலர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் மதுமிதா இவருடன் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது  இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

 இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் மதுமிதா கடந்த டிசம்பர் மாதம் கர்ப்பமாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மதுமிதா பண்ணி திருமணம் செய்து கொள்ளுமாறு அஜித்துடன் தெரிவித்துள்ளார் ஆனால் அஜித் செய்து கொள்ள தயங்கியுள்ளார். இதற்கிடையே திருவாரூருக்கு சென்ற அஜித் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய தயாராகி உள்ளார்.

இதையறிந்த இதை அறிந்த மதுமிதா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அஜித் கடந்த 10 ஆம் தேதி மதுமிதாவை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் ஆன இரண்டாவது நாளே அஜித் தனது நண்பர் வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் மதுமிதா அஜித் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்த போலீசார் விரைந்து வந்து மதுமிதாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman protest in husband home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->