திருமணத்தை தாண்டிய உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


காணாமல் போன பெண் முகம் சிதைக்கப்பட்ட சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம், சின்ன குக்குந்தை பகுதியை சேர்ந்தவர்  ஜெய்சங்கர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.  மகேஸ்வரிக்கு திருமணத்தை கடந்து பலருடன் தொடர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால்ம் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டடுள்ளது.

கடந்த வாரம் தாய்வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிய அவர் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அந்த பகுதியில் உள்ள கிணறில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவருடன் தொடர்பில் இருந்தவர்கலை விசாரணை செய்தனர். அந்த பகுதியை சேர்ந்த பிரபுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரபுவிற்கும் மகேஸ்வரிக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவதன்று, இருவருக்கும் சந்தித்த போது மற்றவர்களுடன் ஏன் தொடர்ப்பில் இருக்கிறாய் என மகேஸ்வரியை பிரபு கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது  அவரை பிரபு கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Murder Near Ranipet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->