உயிரை பறித்த செல்பி மோகம்... ஆற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..! - Seithipunal
Seithipunal


மலைபாதையில் அனுமதி இல்லாமல் இயங்கிய தனியார் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வினிதா என்ற பெண் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அவரது நண்பர்களுடன் கல்லட்டி மலைபாதையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர்.  இந்நிலையில், அவர்கள் அங்கிருந்த ஆற்றின் ஓரத்தில் நின்று செல்பி எடுத்துள்ளானர். அதன்பின், அவர் காட்டாற்று வெள்ளத்தில் தவறி விழுந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த விடுதி உரிமம் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. இதனால், அந்த விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Death Near Nilagiris


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->