கணவர் கண்டிப்பு... 3 வயது குழந்தையுடன் தூக்கில் தொங்கிய மனைவி... காஞ்சிபுரத்தில் சோகம்..!
Woman commits suicide with three year old child in kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் மூன்று வயது குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் என்.ஜி.ஓ நகர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி இன்ஜினியரிங் பட்டதாரி சரண்யா (24). இவர்களது மகன் ஜிஷ்ணு(3). கடந்த சில நாட்களுக்கு முன்பு நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சென்று வந்த சரண்யாவை, மதன்குமார் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் வேலைக்கு சென்றால் குழந்தையை கவனிக்க முடியாது என்று கூறி சரண்யாவை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சரண்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் யாரும் இல்லாதபோது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தை மற்றும் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
English Summary
Woman commits suicide with three year old child in kanchipuram