திருப்பூரில் பரபரப்பு - அரசுப்பள்ளியில் நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண் உடல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வு அறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளியின் பின்புறம் தகரத்தில் கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து பள்ளி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, தகரக் கொட்டகைக்குள், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப்பள்ளி வளாகத்தில் பெண் சடலம் நிர்வாணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman body rescue in tirupur govt school


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->