ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கைது.! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கைது.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமானதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 25 நாட்களுக்குப் பிறகு மகாலட்சுமி சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருப்பதாகவும், அதனால், தன் சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு செநின்றுள்ளார். அதன் பின்னர் மகாலட்சுமி திரும்ப வரவில்லை. 

இதையடுத்து மணிகண்டன் தொலைபேசியில் மகாலட்சுமியைத் தொடர்பு கொண்டபோது விரைவில் வந்து விடுவதாக கூறியும், இதுவரைக்கும் அவர் வராததால் மணிகண்டன் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மகாலட்சுமி செல்லும்போது 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை செய்ததில், மகாலட்சுமி இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் திருமணம் செய்ததும், ஐந்தாவது முறையாக மணிகண்டனை திருமணம் செய்து கொண்டு அவருடைய நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது.

மேலும், மகாலட்சுமி ஆறாவது முறையாக கோயமுத்தூர் விமான நிலையம் அருகே சொந்தமாக கார் வைத்து வேலை செய்து வரும் சேலம் ஆத்தூர் அருகே குமாரபாளையத்தைச் சேர்ந்த சின்ராஜ் என்பவரை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர். இளம்பெண் ஒருவர் ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for cheating with six boys marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->