ஈரோடு : கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்.!!
wife kill husband in erode
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்.!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி-பத்மா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் ஏற்கனவே இறந்துவிட்டார். மகன் மட்டும் திருச்சியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இதனால் சுப்பிரமணியும், பத்மாவும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் சுப்பிரமணிக்கு அப்பகுதியில் இருந்த பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து மனைவி பத்மாவுக்கு தெரியவந்ததனால் அவர் சுப்பிரமணியிடம் கள்ளத்தொடர்பை விட்டு விடும் படி தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதன் படி நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மீண்டும் கள்ளக்காதலை கைவிடும்படி பத்மா கோவத்தில் சண்டை போட்டுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த சுப்பிரமணி, மனைவியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பத்மா, வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சுப்பிரமணியின் முகத்தில் வீசியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சுப்பிரமணி கதறி அழுதுள்ளார். இருப்பினும், ஆத்திரம் தீராத பத்மா உருட்டு கட்டையை எடுத்து சுப்பிரமணியின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
English Summary
wife kill husband in erode