அமித் ஷா ஆலோசனையில் பங்கேற்க டெல்லி செல்லாதது ஏன்?உண்மையை உடைத்து பேசிய அண்ணாமலை! அதிர்ச்சியில் அண்ணாமலை ஆதரவாளர்கள்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும் காணாமல் போனது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக–பாஜக கூட்டணி மீதான ஆலோசனை, உட்கட்சி பூசல் விவகாரம், தொகுதி பங்கீடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதம் நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்காக எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைப்பு வந்திருந்தும் டெல்லிக்கு செல்லாத அண்ணாமலை குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், “திருமண நிகழ்வுகள் மற்றும் சொந்த வேலைகள் காரணமாக டெல்லி பயணம் செய்ய முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலை தரப்பினருக்கு கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. பிஎல் சந்தோஷ் தமிழ்நாடு வந்தபோது, அண்ணாமலை குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் அளித்ததாகவும் தகவல்கள் பரவியிருந்தன. இதனாலேயே உட்கட்சி பூசல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இருந்த கூட்டத்தை அண்ணாமலை வேண்டுமென்றே தவிர்த்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணி வலுப்படுத்தப்படும் சூழ்நிலையில், முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது, மாநில பாஜகவில் நிலவும் உள்ளக சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why didnot Amit Shah go to Delhi to participate in the consultation Annamalai broke the truth and spoke Annamalai supporters are shocked


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->