அருப்புக்கோட்டையில் 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


விருதுநகர், அருப்புக்கோட்டை மருத்துவமனையிலிருந்து யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் சந்தனமாரி என்பவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. 

அதில் 15 வயதான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சந்தனமாரி  மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கும் பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த உறவினர் இளங்கோவன் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். 

இதனால் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தனர். 

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தனமேரி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதித்து இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viruthunagar 15 year old girl has baby girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->