வேலூர் | மது போதையால் ஏற்பட்ட தகராறு! ஆத்திரமடைந்த மகனின் வெறிச்செயல்!  - Seithipunal
Seithipunal


வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது63 ) இவரது மகன் சரத்குமார் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். 

சரத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்திருந்தார். தினமும் இவர் மது அருந்திவிட்டு தாய் மற்றும் தந்தை இடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் சரத்குமார் வழக்கம் போல் நேற்று மது  அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபோது தேவராஜ் மற்றும் சரத்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் வாக்குவாதம் தொடர்ந்து தகராறு ஏற்பட்ட நிலையில் தேவராஜ் தன் மகனான சரத்குமார் மீது கல்லால் தாக்கியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் அவரது தந்தை தேவராஜ் கழுத்தை கத்தி எடுத்து அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தேவராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். 

இதனை பார்த்த தேவராஜ் மனைவி மற்றும் மகள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தந்தையை, மகன் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore father murder case police inquiry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->