வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக திருச்சி, சிதம்பரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு மொத்தமாக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பயணிகள் தொலை தூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் குழுவாக பயணம் செய்ய விரும்புவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Velankanni festival special Bus service from tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->