இருசக்கர வாகனம் மோதி 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வண்ணான். இவருடைய மகள் நிகிதா (12). இவர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிகிதா பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவதற்காக சோமராசம்பேட்டை பேருந்து நிலைய பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக நிகிதா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிகிதாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே நிகிதா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த கீழமேடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(23) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler accident in Trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->