சேலத்தில் இருசக்கர வாகன மோதி மூதாட்டி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பழையூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 68). இவர் பழையூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பெருமாயி மீது மோதியுள்ளது. 

இதில் பெருமாயி பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர், பெருமாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler accident in salem


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->