அரசு அனுமதி பெறாமல் வாடகை விடும் இரு சக்கர மோட்டார் வாகனத்தை தடைசெய்ய வேண்டும்!
Two wheeled motor vehicles that are rented out without government permission should be banned
அரசு அனுமதி பெறாமல் வாடகை விடும் இரு சக்கர மோட்டார் வாகனத்தை தடைசெய்ய வேண்டும் என்று ஏ ஐ டி யூ சி,புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர் நலசங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏ ஐ டி யூ சி,புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர் நலசங்க மாநில பொதுக்குழு கூட்டம்முதலியார் பேட்டை ஏ ஐ டி யூ சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்டோ சங்கர் மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார், ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார், ஆட்டோ சங்க மாநில பொருளாளர் சந்தா, சிறப்பு, நிதி, குடும்ப நிதி, வரவு செலவு சம்பந்தமாக பேசினார் ஆட்டோ சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அந்தோணி, மாநில துணைத்தலைவர்கள் பாளையத்தான், இது வரலையா பிரகாஷ், நடனமூர்த்தி, ராமதாஸ், மாநில செயலாளர்கள் சதீஷ், ராஜி, சதீஷ்குமார், ராஜா, ஜெயபால், மணிகண்டன், சோமசுந்தரம், பழனி, ஆகியோர் கூட்டத்தில் மறைந்தஏ ஐ டி யூ சி ஆட்டோ சங்கத்தில் சங்கத்தில் உருப்பினராக இருந்து மறைந்த6 குடும்பங்களுக்கு கலா 10,000 விதம் 60 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

ஏஐடியூசி ஆட்டோ சங்கமாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசு அனுமதி பெறாமல் வாடகை விடும் இரு சக்கர மோட்டார் வாகனத்தை தடைசெய்:
புதுச்சேரியில் சட்டத்திற்கு விரோதமாக அரசின் அனுமதி பெறாமல் இருசக்கர மோட்டார் சைக்கிள் நிலையங்கள் இருந்து வருகிறது. இவர்கள் சுற்றுலா பயணிகளிடம் நாளொன்றிற்கு 1200 வரை வாடகை வசூலித்து லாபம் பெற்று வருகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இத்தொழிலையே நம்பியுள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் கடத்தாமல் இவர்கள் மீது அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆட்டோ செயலி APP உருவாக்கு,அச்சமின்றி மக்கள் ஆட்டோவை பயன்படுத்தும் வகையில்
புதுச்சேரி அரசு தொழிற்சங்கத்தோடு கலந்து பேசி ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து ஆட்டோ செயலியை அரசே உருவாக்கு.
ஆட்டோக்களின் உதிரி பாகங்கள் அரசு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இருந்து வருகின்றது. இந்த ஆட்டோக்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் வாங்கி வருகிறார்கள். எனவே அரசு நிறுவனங்கள் மூலம் உதிரி பாகங்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தை இழுவைப்படிக்கட்டாக மாற்றிடுக:புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லாத காரணத்தினால் இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்தவில்லை. தற்பொழுது இந்த மேம்பாலத்தில் சமூக விரோத செயல்கள் நடைப்பெற்று வருகிறது. எனவே, இந்த மேம்பாலத்தினை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் இயங்கக்கூடிய இழுவைப் படியாக (Escalator) மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
குழந்தைகள் மருத்துவமனை எதிரில் சுரங்க நடைப்பாதை அமைத்திடுக:எல்லைப்பிள்ளைச்சாவடி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் மக்கள் (பாதசாரிகள்) சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வப்பொழுது விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்தினை தடுப்பதற்கு சுரங்க நடைப்பாதை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேஸ் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுவதற்கு நடவடிக்கை எடு.பெருகிவரும் வாகனம் எண்ணிக்கையின் காரணமாக நகர பகுதியில் கடுமையான மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய ஆட்டோக்களை கேஸ் பயன்படுத்தி ஓட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஆக கூடிய செலவுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும், LPG மற்றும் CNG கேஸ் நிரப்புவதற்கான ஏற்பாடு செய்
மேம்பாலங்கள், சாலை விரிவுபடுத்தல், புறவழிச் சாலைகள், அமைத்திட வேண்டும்:புதுச்சேரி நகரப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தங்களின் பணிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நெரிசலின் காரணமாக பல இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. இத்தகைய பாதிப்புக்களிலிருந்து மக்களை விடுவிக்க புதுச்சேரி நகரப் பகுதிகளில், ராஜீவ் காந்தி சிலை முதல், இந்திரா காந்தி சிலை, மரப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதேபோல் உப்பளாற்றின் மீது மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதை விரைவாக செய்து முடிக்கவேண்டும். அதுபோல் அரசு அறிவித்த மேம்பால அமைக்கும் பணிகளையும், புறவழி சாலை, சாலை விரிவுபடுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary
Two wheeled motor vehicles that are rented out without government permission should be banned