சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து இருவர் பலி.!

புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கம் தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.

பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்னி பேருந்து கவிழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died for accident in salem kallakurichi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->