காரில் கஞ்சா கடத்தல் : கையும் களவுமாக சிக்கிய வடமாநிலத் தொழிலாளிகள் கைது.! - Seithipunal
Seithipunal


காரில் கஞ்சா கடத்தல் : கையும் களவுமாக சிக்கிய வடமாநிலத் தொழிலாளிகள் கைது.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை அருகே சென்னா சமுத்திரம் சுங்கச் சாவடியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதி வழியாக இரண்டு சொகுசு கார் அதிவேகமாக வந்துள்ளது.

இதைக்கவனித்த போலீசார் அந்த சொகுசு காரை மடக்கி பிடித்து விசாரணை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், போலீசாரைப் பார்த்ததும் கார்ல் இருந்த நான்கு பேர் காரை வழியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் இரண்டு கார்களையும் சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

அதனை காருடன் பறிமுதல் செய்த போலீஸார் தப்பி ஓடிய நான்கு பேரில் இரண்டு இளைஞர்களை துரத்திச் சென்று பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் போலீசார் தப்பி ஓடிய மற்ற இரண்டு நபர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for kidnape kanja in ranipet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->