போதை பொருட்கள் கடத்திய இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


போதைப் பொருட்கள் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து தர்மபுரி வழியாக போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தீவட்டிப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல்துறையினர், பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்றில் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 188 கிலோ போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காரில் இருந்து இரண்டு பேரிடம் விசாரணை செய்ததில், அவர்கள் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் மற்றும் நூர்முகமது என்பதும், அவர்கள் பெங்களூருவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்த கார் மற்றும் 6 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two drug smugglers arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->