வாக்குத் திருட்டை மறைக்க முயற்சி நடக்கிறது... அடுத்த குண்டை வீசிய ராகுல்காந்தி! - Seithipunal
Seithipunal


மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக-வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் 'வாக்குத் திருட்டில்' ஈடுபட்டதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாக அவர் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது மத்தியப் பிரதேசம் (ம.பி.) மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ம.பி.யில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அவர், இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: "ஹரியானா குறித்து நான் அளித்த விளக்கக் காட்சியில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதைத் தெளிவாகக் கண்டேன். இது 8 வாக்குகளில் ஒரு ஓட்டு திருடப்பட்டது என்பதாகும். இதைத் தொடர்ந்து, தரவுகளைப் பார்த்த பிறகு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்குத் திருட்டு நடந்ததாக நான் நம்புகிறேன்."

பாஜக-வும், தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்குகளைத் திருடுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், "வாக்குத் திருட்டு தொடர்பான கூடுதல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை படிப்படியாக வெளியிடுவோம். எனது முக்கியப் பிரச்சினை என்னவென்றால், நாட்டின் ஜனநாயகமும், அம்பேத்கரின் அரசியலமைப்பும் தாக்கப்படுகின்றன."

பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் இணைந்து இதை நேரடியாகச் செய்வதால், நாடு துன்பங்களை அனுபவிப்பதாகவும், "பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறார்" என்றும் ராகுல் காந்தி கூறினார். தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துடன் (SIR) இந்த வாக்குத் திருட்டை மறைக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress Rahul Gandhi Madhyapradesh chattisgarh vote theft BJP EC


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->