காஞ்சிபுரம் : மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு - ஒரே நேரத்தில் 21 வீடுகள் எரிந்து நாசம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் சாலையில் செல்லும் மின் கம்பிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 21 வீடுகள் எரிந்து நாசமாகின.

அப்போது, வீட்டில் இருந்த இரண்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. மேலும் ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் தீயில் எரிந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதற்கிடையே இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty one house damage for fire accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->