இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல்...! பாகிஸ்தானில் 9 நகரங்களில் குறி வைத்தது...!
Indias drone strike Targeted 9 cities Pakistan
மத்திய அரசு,''ஆபரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனிடையே, பாகிஸ்தானின் லாகூரில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அங்குள்ள வால்டன் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது.
இதில் இந்திய ராணுவத்தினர் 4 பேர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில், லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் 8 நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளது.மேலும், கராச்சி, சக்வல், சோர், மியானோ, ராவல்பிண்டி, குஜ்ரன்வாலா, பகவல்பூர், அட்டோக் ஆகிய நகரங்களிலும் ட்ரோன் தாக்குதல் நடந்தது.
இதில்,நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தற்கொலை படை ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் காஷ்மீர் எல்லை மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், 9 நகரங்களில் 12 டிரோன் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தது.
இந்த ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்த ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது யார்? என்பது தெரியவில்லை.
நேற்று அதிகாலை பாகிஸ்தான் மீது இந்தியா ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் தாக்குதல் நடத்திய பிறகு அதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
English Summary
Indias drone strike Targeted 9 cities Pakistan