காதல் ஜோடிகள் ஒருசேர எடுத்த விபரீத முடிவு.. தகர கொட்டகையில் அதிர்ந்துபோன மக்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் ஆனைக்கல்பட்டி பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் தகர கொட்டகையில் பெண் மற்றும் ஆண் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தூக்கில் பிணமாக இருந்த இருவரும் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணையில், வாலிபர் காடுவெட்டி அருகேயுள்ள மேலவெளிக்காடு பகுதியை சார்ந்த முத்துசாமி என்பவரின் மகன் நவீன்குமார் (வயது 23) என்பதும், பெண்மணி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரூரை அடுத்துள்ள ஆலம்பட்டி பகுதியை சார்ந்த 17 வயது கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி மாணவி மாயமாகியுள்ளார். அவரை நவீன்குமார் கடத்திவிட்டார் என்று பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Love Couple Suicide Police Investigation 1 October 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->