திருச்சி | நிலை தடுமாறி கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்தினால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திருச்சி, பள்ளிக்கு அருகே உள்ள கடைக்குள் இன்று காலை அரசு பேருந்து புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 7 மணி அளவில் அரசு நகர பேருந்து ஒன்று மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. 

இந்த பேருந்தில் 10 பயணிகள் இருந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இருந்த வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி நுழைவு வாயிலில் இருந்த ஒரு கடைக்குள், தொலைபேசி கம்பம் போன்றவற்றை இடித்துக் கொண்டு பேருந்து வேகமாக உள்ளே புகுந்தது. 

காலை நேரம் என்பதால் கடை பூட்டி இருந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் பேருந்து நிலை தடுமாறி வருவதை பார்த்து அங்கிருந்து அலறி அடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

விபத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து இடிபாடுகளில் சிக்கிய பேருந்து ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy government bus stumbled into shop


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->