தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்…! - முக்கிய ரெயில் சேவைகளில் திடீர் மாற்றம்...!
Track maintenance work intensifies Sudden changes major train services
ஊத்துக்குளி – திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளப் பகுதியிலில் அவசர பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பயணிகள் பாதுகாப்பையும் பணிகளின் சீரான முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சில முக்கிய ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16843) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வரும் 25, 27 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், அங்கிருந்து பாலக்காடு நோக்கி முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
மேலும், பிலாஸ்பூர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22815) வரும் 26-ந் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு, 27-ந் தேதி சேலம் – கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையிலான ஏற்ற வசதியான இடத்தில், 2 மணி 10 நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
இந்த தற்காலிக மாற்றங்கள் குறித்து ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Track maintenance work intensifies Sudden changes major train services