தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்…! - முக்கிய ரெயில் சேவைகளில் திடீர் மாற்றம்...! - Seithipunal
Seithipunal


ஊத்துக்குளி – திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளப் பகுதியிலில் அவசர பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பயணிகள் பாதுகாப்பையும் பணிகளின் சீரான முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சில முக்கிய ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16843) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வரும் 25, 27 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், அங்கிருந்து பாலக்காடு நோக்கி முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

மேலும், பிலாஸ்பூர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22815) வரும் 26-ந் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு, 27-ந் தேதி சேலம் – கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையிலான ஏற்ற வசதியான இடத்தில், 2 மணி 10 நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இந்த தற்காலிக மாற்றங்கள் குறித்து ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Track maintenance work intensifies Sudden changes major train services


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->