திருமதி.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


 தாசிமுறையை ஒழிக்க போராடிய 'சமூக பெண் சீர்திருத்தவாதி'திருமதி.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் நினைவு தினம்!.

 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883 - ஜூன் 27, 1962) தமிழில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை முன்வைத்து எழுதிய எழுத்தாளர். சாதி ஒழிப்பு, பெண்கல்வி, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடியவர். ஈ.வெ.ராமசாமி (பெரியார்) அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் முதன்மையான பிரச்சாரகராக இருந்தவர். 

 தேவதாசி முறை, தீண்டாமை மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளுக்கு எதிராகப் போராடினார். 'தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்ற நூலை எழுதினார், இது தேவதாசிகளின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

 மூவலூர் இராமாமிர்தம்இவர் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள "பாலூர்" என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார். இவரது நினைவாக, தமிழ்நாடு அரசு ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கிறது. பெண்களின் உரிமைகளுக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்ட ஒரு சிறந்த ஆளுமையாகக் கருதப்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is the remembrance day of Mrs Moovalur Ramamirtham Ammaiyar


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->