கலைத் தந்தை" திரு.கருமுத்து தியாகராஜன் அவர்கள் பிறந்ததினம்!.
Today is the birthday of Art Father Mr Karumuttu Thiagarajan
கலைத் தந்தை" திரு.கருமுத்து தியாகராஜன் அவர்கள் பிறந்ததினம்!.
விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களையும் நிறுவிய "கலைத் தந்தை" திரு.கருமுத்து தியாகராஜன் அவர்கள் பிறந்ததினம்!.
கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.

இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.
கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81வது வயதில் 1974 சூலை 29 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Today is the birthday of Art Father Mr Karumuttu Thiagarajan