சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை!
TNEB power cut in chennai alert
சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (31.05.2025) மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் முடிந்தால், அதனைத் தொடர்ந்து மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்:
பெருங்களத்தூர்:
காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரணியம்மன் கோவில் பின்புறம்).
முடிச்சூர்:
அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஸ்தலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், வி.எம். கார்டன்.
நந்தம்பாக்கம்:
மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசா கிராண்டா கோட்டை மற்றும் உட்சைட், கிரிகோரி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பெல் நகர், ஸ்ரீ ராம் கார்டன், மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், பிபிசிஎல் முதல் இரண்டாம் கட்டம் வரை, வல்லீஸ்வரன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.
மாடம்பாக்கம்:
படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர்.
English Summary
TNEB power cut in chennai alert