+1, +2 பொதுத்தேர்வின் விடைத்தாளில் இப்படி மட்டும் எழுதிவிடாதீர்கள் - அப்புறம் ஃபெயில் தான் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
TN School Public Exam DGE
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதியும் தொடங்க உள்ளது. தொடர்ந்து, மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறை :
* தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
* காப்பி அடித்தல் மற்றும் விடைத்தாள்களை மாற்றி எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
* பொதுத்தேர்வில் ஆள் மாறட்டும் செய்தால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
* விடைத்தாள்களில் மதிப்பெண் வழங்கும் படி வேண்டுகோள் விடுத்தால் சம்பந்தப்பட்ட பாடத் தேர்வு ரத்து

* ஒழுங்கின செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
* தேர்வர்கள் நேரத்தை காட்டக்கூடிய சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து வரவேண்டும்.
* தேர்வர் துண்டுத்தாளை தன் வசம் வைத்திருந்து பார்த்து எழுதினால் அல்லது எழுத முயற்சித்தது கண்டறியப்பட்டால் அவரின் அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும். மேலும், குற்றத்தின் தன்மை அடிப்படையில் அடுத்த 2 பருவங்களுக்கும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் :
பொது தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
TN School Public Exam DGE