#BigBreaking | தமிழகத்திற்கு வந்த ஆபத்து நீங்கியது - அரசு தரப்பில் வெளியான அதிகாரபூர்வ செய்தி!
TN Govt Announce Heavy Rain Alert 19112022
கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுவிட்டதால், இன்று காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு!
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விடுத்துள்ள அறிவிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின் படி, இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால், 20-11-2022 முதல் 22-11-2022 வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று செய்தி வெளியீடு வழங்கப்பட்டது.
பின்னர் இன்று (19-11-2022) 3.00 மணி அளவில் வந்த இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt Announce Heavy Rain Alert 19112022