அரசு & தனியார் வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ. 52,174 கோடி! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் தகவலின்படி, கடந்த மூன்று நிதியாண்டுகளில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ. 52,174 கோடியை கடந்துள்ளது.

முன்னதாக, இத்தொகை ரூ. 42,271 கோடியாக இருந்த நிலையில், 2022 முதல் 2024 வரை அது கணிசமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட அறிக்கையில் துணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறியதாவது:

2024 நிதியாண்டில் மட்டும், அரசு வங்கிகளில் ரூ. 45,140.78 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ. 7,033.82 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகைகள், இந்திய ரிசர்வ் வங்கி நிர்வகிக்கும் வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதனுடன், காப்பீட்டு நிறுவனங்களில் 2022-24 காலகட்டத்தில் ரூ. 21,718 கோடி வரை உரிமை கோரப்படாத தொகை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, 2024 மார்ச் வரை உரிமையில்லா வைப்புகள் மற்றும் காப்பீட்டு தொகைகள் சேர்த்து ரூ. 78,212.53 கோடி என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை கூறுகிறது.

இதற்கிடையே, வங்கிகளில் உறைந்திருக்கும் பணங்களை அறிந்துகொள்ள புதிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பயனாளர்கள் தங்கள் பெயருக்கேற்ப உரிய தொகைகள் எங்கு இருப்பதை வங்கி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RBI Bank Deposit People Central Govt


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->