திருப்பூரில் திடீரென ரெயிலை நிறுத்திய பயணிகள்! அதிர்ச்சியடைந்த போலீசார்! காரணம் இது தான்? - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ஹூப்ளியில் இருந்து கேரளா கொச்சுவேலிக்கு சேலம், திருப்பூர், வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் இந்த ரயில் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கு புறப்பட்டு பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏ.சி பழுது ஏற்பட்டது. 

இதனால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் அனைவரும் அவதிக்குள்ளாக்கினர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. 

ஆனால் பழுதான ஏ.சியை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு சேலம், ஈரோட்டை கடந்த ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்தும் ஏ.சி சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த ஏ1 பெட்டியில் பயணித்த பயணிகள் ரயில் புறப்பட தயாரான போது அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயில் நிறுத்தினார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக ஏ1 பெட்டியில் பயணித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பயணிகள் தெரிவித்து இருப்பதாவது, பணம் கொடுத்து தான் நாங்கள் பயணிக்கிறோம். பெங்களூரிலிருந்து ஏ.சி இல்லாமல் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. உடனடியாக சரி செய்து தாருங்கள் என அதிகாரிகளிடமும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அதிகாரிகள் கோவை போத்தனூர் சென்றதும் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததை அடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் புறப்பட்ட சென்றனர். 

ரயில் போத்தனூர் சென்றதும் ஏ.சி பழுது பார்க்கப்பட்டு மாற்று ஏ.சி இணைக்கப்பட்டது. அதன் பிறகு பயணிகள் நிம்மதியுடன் பயணித்தனர். ஏ.சி பழுது ஏற்பட்டதால் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupur train stopping Passengers protesting 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->