திருப்பூர் | சிதைந்த உடலை கவ்வி சென்ற நாய்கள்! பொதுமக்கள் அதிர்த்தி!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் பகுதியில் 7 சென்ட் நிலத்தில் பொதுச் சுடுகாடு ஒன்று செயல்பட்டு வருகிறது. முன்னதாக இங்கு 200 குடும்பங்கள் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்போது 3000 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர்.

இந்த சுடுகாட்டில் வாரத்தில் 4,5 உடல்கள் புதைக்கப்படுகிறது. இந்நிலையில் புதைக்க இடம் இல்லாததால் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ள உடல்களை வெளியே எடுத்து பின்னர் புதிய உடல்களை புதைத்து வருகின்றனர். 

இதனால் சுடுகாட்டில் சிதிலமடைந்த உடல்கள் மேலே சிதறி கிடக்கிறது. இந்த உடலை அங்குள்ள தெரு நாய்கள் கவ்வி பொதுமக்கள் வாழும் பகுதிக்கு இழுத்துச் செல்வதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உண்டாகிறது. 

மேலும் இதனை பார்த்து பெண்கள், குழந்தைகள் பெரும் அச்சம் அடைகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupur decomposed body hugged dogs 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->